Monday, October 15, 2007

என் உயிரைப் பார்த்தேன் !?!?!

மின்னல் பார்த்தேன் - இரு
மின்னல்களா? பார்த்தேன்
உன் கண்கள் பார்த்தேன் !

மூன்றாம் பிறை பார்த்தேன்
மூன்றாம் பிறையா? பார்த்தேன்
உன் நெற்றி பார்த்தேன் !

மேகம் பார்த்தேன் - கரு
மேகமா? பார்த்தேன்
உன் கூந்தல் பார்த்தேன் !

Apple பார்த்தேன் - இரு
Apples ஆ ? பார்த்தேன்
உன் கன்னங்கள் பார்த்தேன் !

பூக்கள் பார்த்தேன்
பூக்களா? பார்த்தேன்
உன் புன்னகை பார்த்தேன் !

நிலவு பார்த்தேன் - முழு
நிலவா? பார்த்தேன்
உன் முகம் பார்த்தேன் !

கவிதை கேட்டேன் - புதுக்
கவிதையா? கேட்டேன்
உன் உளறல் கேட்டேன் !

ஓவியம் பார்த்தேன் - புது
ஓவியமா? பார்த்தேன்
உன் கிறுக்கல் பார்த்தேன் !

வானவில் பார்த்தேன்
வானவில்லா? பார்த்தேன்
உன் சேலை பார்த்தேன் !

உயிரைப் பார்த்தேன் - என்
உயிரையா? பார்த்தேன்
நான் உன்னைப் பார்த்தேன் !!!

1 comment:

priyamudanprabu said...

அழகைப் பார்த்தேன்
வெரும் அழகையா பார்த்தேன்
உங்கள் கவிதை யழகை பார்த்தேன்

http://priyamudan-prabu.blogspot.com/