Wednesday, May 2, 2007

மழைத் துளிகள் ஒவ்வொன்றும்...

மழைத் துளிகள் ஒவ்வொன்றும்
உன் பார்வை என்றிருந்தால்...
மழையில் நாள் தோறும்
நனயச் சம்மதம்....

என் கனவுகள் தோறும்
நீ வருவாய் என்றிருந்தால்...
கண்களை மூடிக் கொண்டு
நாள் தோறும் தூங்கச் சம்மதம்....

காற்றாக நான் இருந்து
உன் மூச்சில் கலப்பதென்றால்...
நில்லாது அலைகின்ற
காற்றாகச் சம்மதம்...

நிழலாக உனக்கு
நான் இருக்க முடியும் என்றால்...
நிலத்தோடு தேய்கின்ற
நிழலாகச் சம்மதம்....


1 comment:

LFHBIHLH said...

"மழைத் துளிகள் ஒவ்வொன்றும்..."

UR kavithaikal ellame very nice...Keep up the good work...

ஒவ்வொரு நாளும் ...புதுக் கவிதைகள் மலரும்... please proff it...make us happy...


for real, its very nice...

more to come later on...

suv