Sunday, May 13, 2007

நீயும் என்ன சொல்லுவாய்?

நீ நடக்கும் தெருவைப் பார்த்து
நெஞ்சுக்குள்ளே வேர்க்கிறேன்
நிலவிடம் தினமும்
நீ நலமா என்றும் கேட்கிறேன்

பூவிடம் உன்னைப் பற்றி
கவிதை சொல்லிப் பார்க்கிறேன்
காற்றிடம் உனக்கு தினமும்
ஒரு கடிதம் சேர்க்கிறேன்

பார்க்கின்ற யாவரும் என்னைப்
பைத்தியம் என்றே சொன்னார்கள்
கேட்கின்றேன் பெண்ணே
நீயும் என்ன சொல்லுவாய்?
நீயும் என்ன சொல்லுவாய்?

No comments: