Tuesday, May 15, 2007

தூங்காதிரு ...என் துணையாயிரு...

தூங்காதிரு -என்
துணையாயிரு
நீங்காதிரு -என்
நினைவாயிரு

பூங்காவிலே எனக்காய்
நீ காத்திரு
பூங்காற்றிலே என் வாசம்
எதிர்பார்த்திரு

அலைக்காக காத்திருக்கும்
கரையைப் போல காத்திரு
பிள்ளை வரக் காத்திருக்கும்
தாயைப் போல காத்திரு
நிலவுக்காக காத்திருக்கும்
வானம் போல காத்திரு
நீ வரக் காத்திருக்கும்
நான் போல காத்திரு

தூங்காதிரு -என்
துணையாயிரு
நீங்காதிரு -என்
நினைவாயிரு

No comments: