Thursday, May 3, 2007

அடி என்ன செய்வதாய் உத்தேசம்???

கடைக் கண் பார்வை நீ தருவாய்..அதில்
காதலின் கொலுசொலி நான் கேட்ப்பேன்...
எடுப்பாய் என் முன் நடை இடுவாய் ..அதில்
என்னை முழுவதாய் நான் மறப்பேன்

நெருப்பாய்ச் சுடுதே உன் நினைவு ..பனிக்
காலம் கூட வேர்க்கிறது..
இருக்கா? உன்னுள் என் நினைவு..அடி
இல்லை என்றால் நான் என்ன செய்வேன்

எத்தனை தடவைகள் பார்த்து விட்டோம் - ஒரு
வார்த்தை ஏனும் பேசவில்லை
அத்தனைக்கும் நீ பொதுவாய் - பாதிப்
புன்னகை கூட வீசவில்லை
ஒரு பித்தனைப் போல் என்னைத் தினம்
நிலைக் கண்ணாடி முன்னே பேச விட்டாய்
இந்தப் பக்த்தனை என் அம்மனும் நீ
அடி என்ன செய்வதாய் உத்தேசம்???


No comments: