Friday, May 4, 2007

உயிரின் உருவம் என்னவென்று ...

இருட்டினில் கூட உன் நினைவு
நிழலாய் என்னைத் தொடர்கிறது - என்
இரத்ததின் ஒவ்வொரு துளியினிலும்
உன் பெயரின் முத்திரை இருக்கிறது

நித்திரையிலும் உன் நினைவு
கனவின் உருவினில் வருகிறது - உன்னை
நீங்கி இருந்தால் உன் நினைவு
நெருப்பாய் என்னைச் சுடுகிறது

துடிக்கும் இதயத் துடிப்பிலெல்லாம் - உன்
பெயர் தானடி கேட்கிறது
இதயத்தின் ஓசை என்னவென்றால்
அடி என்னவளே நான் என்ன சொல்வேன்

உயிரின் உருவம் என்னவென்று - இந்த
உலகினில் யாருக்கும் தெரியாது
பல வருடங்கள் நடக்கும் பரிசோதனைக்கு
முடிவுகள் ஏதும் கிடையாது

உயிரின் உருவம் என்னவென்று - இவ்
உலகினில் நான் மட்டும் தெரிந்து கொண்டேன்
என் உயிரின் உருவம் நீ என்று - இவ்
உலகில் யாருக்கும் தெரியாதே

No comments: