Wednesday, May 9, 2007

நீயும் ....நானும்...

சில வேளைகளில் தானடி...
உன்னை மறக்க முடிகிறது !!!
சில வேளைகளிலாவது
உன்னால் என்னை நினைக்க முடிகிறதா ???

தெருவெல்லாம் உன்னைத் தானடி...
தேடிப் பார்க்கிறேன் !!!
என் வீட்டு யன்னலிலாவது
நீ என்னைத் தேடிப் பார்க்கிறாயா???

நாள் தோறும் என் கனவுகளில் ...
நீ தானடி வந்து போகிறாய் !!!
ஒரு நாளாவது உன் கனவில்...
நான் வந்திருக்கிறேனா ???

நீ எறிவதற்காகத் தந்த empty coke can் கூட...
எனக்கு பரிசுப் பொருள் !!!
நான் அன்பாகத் தந்த பரிசுப் பொருட்களில் ஒன்றையாவது...
நீ பத்திரப் படுத்தி இருக்கிறாயா ???

உன் உதட்டால் வரும் ஒவ்வொரு வார்த்தையையும்..
நான் ரசித்துக் கேட்கிறேன் !!!
என்னுடைய கவிதைகளில் ஏதாவது ஒன்றையாவது...
நீ வாசித்துப் பார்திருக்கிறாயா???

1 comment:

Bahee said...

till roll பேப்பரில எழுதின பழைய கவிதைகளும் இதில வருமோ?

nice one by the way!! hope you can bring back the memories of the 90s :)